siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

நினைவஞ்சலி பத்தாம் ஆண்டு அமரர் இளையதம்பி வீரகத்தி 16.01.2022

அன்னை  மடியில்:  — ஆண்டவன் அடியில் : 22.01.2012 
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  இளையதம்பி வீரகத்தி அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 16-01-2022..ஞாயிற்றுக்கிழமை  அன்று 
 காலச்சுழற்சியில் பத்து ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு
 உருவம் எங்கள் அப்பா
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.com/ நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் புத்தூர் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர்
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக