siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 26 ஜனவரி, 2022

இலங்கை மக்களுக்கு சீன அரிசியால் ஏற்படவுள்ளஆபத்து

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.சீனா தனது சாகுபடிக்கு அதிக அளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும்
 அவர் கூறினார்.
இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். தற்போதைய அரசாங்கத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 400 மில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கு மேல் இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் 
தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக