siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

எரிவாயு அடுப்பு வவுனியாவில்வீடொன்றில் வெடித்து சிதறியது

வவுனியாவில் சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பாதிவாகி இச்சம்பவம் 
 13-02-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 
தெரியவருகையில்,
வவுனியா சிங்கள பிரதேசசெயலக வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் இரவு சமையல் செய்த பின்னர் சமையலறை கதவினை மூடிவிட்டு தூங்கச்சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அதிகாலை தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறையை திறந்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை கண்டு 
அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக