siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 14 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைத்த சுகாதார பிரிவினர்

உணவுக்குள் இலையான் இருந்த காரணத்தினால் கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றிக்கு சுகாதார பிரிவினர் 
சீல் வைத்துள்ளனர்.
 சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார பிரிவினர் சீல்வைத்து
 பூட்டிள்ளனர்.
 ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு  13-12-2023.அன்று 
 சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது.
 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே, பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக