siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் மாத்தளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளது.
 இதேவேளை, மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக