siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 11 டிசம்பர், 2023

சுவிட்சர்லாந்தில் சியோனில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி ஒருவர் காயம்

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றாவது நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இத்தாலி மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்கு வெகு தொலைவில் உள்ள சுமார் 35,000 மக்கள் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

 அடையாளம் காணப்படாத ஆண் துப்பாக்கிதாரியை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிதாரி என நம்பப்படும் 36 வயதுடைய நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் மக்கள் முன்வந்து தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூர் வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளைதனிநபர் அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர்.   இதன்படி, 2.3 மில்லியன் துப்பாக்கிகள் பொது மக்களிடம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சுவிட்ஸர்லாந்தில் 2001 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 
உலகில் பல பாகங்களில் நடக்கும் போரும் மக்களின் வறுமையும், பலர் மன நோய்க்கு உள்ளாக்கப்பட்டதுமே இதன் காரணம் என பொது நலவாதிகள் குறிப்பிடுகிறார்கள். .என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக