siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 2 ஜனவரி, 2018

நினைவஞ்சலி பதின்இரண்டாம் ஆண்டு திரு யோகராசா ஹேமா

 திருகோணமலையைப்பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 02.01.2018
இன்று பதின்இரண்டாம்  ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு  பதின்இரண்டு ஆனாலும் 
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம் 
மனம் ஒரு நிமிடம் 
மயங்க வைத்தது மனதை. 
நாசியினாலும் காணமுடிந்தது 
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
பாசத்திறகாய் எனக்கு ஒரு தம்பி
 அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
தற் பெருமை இல்லாத தங்கம் 
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார் 
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு
 வாழ்ந்தார் 
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
உன்  நினைவுகள் மறையாது
 அழியாது
எம்மை நீங்கி ஏன் சென்றாய்?
பார்க்கும் இடமெல்லாம் உன்னுரும் நிழலாக
நிதமும் உலாவி வருகுதையா
எம் ஆறுதலுக்காய் ஒருமுறை வாராயோ ஹேமா....
எல்லா பிறவியிலும் 
என் அன்பிற்குரிய
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க 
வரம் கேட்கிறேன்..உன் அன்பு 
சகோதர்கள்- அப்பா அம்மா ....
                      தகவல் 
திரு யோகராசா குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக