siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஜனவரி, 2018

பாரிய கொள்ளைக் கும்பல் தென்மராட்சியை அதிர வைத்தனர்

பதுங்கு குழி­யி­னுள் மறைந்­தி­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றைத் தாம் இனம் கண்டு கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்
. மேலும் மூவர் தப்­பி­யோ­டி­விட்­ட­னர்.கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லி­ருந்து 3 வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் ரூபா பணம் மற்­றும் இரண்­ட­ரைப் பவுண் நகை என்­பன மீட்­கப்­பட்­டன என்­றும் 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
சம்­ப­வம் தென்­ம­ராட்சி தெற்கு மற­வன்­பு­ல­வில் இடம்­பெற்­றது. கேர­தீவு முதன்மை வீதி­யி­லி­ருந்து பல உண­வுப் பொதி­க­ளு­டன் ஒரு­வர் சென்­ற­தனை சிவில் உடை­யில் நின்ற பொலிஸ் அலு­வ­லர் ஒரு­வர் கண்­டுள்­ளார்.அவ­ரைப் பொலிஸ் அலு­வ­லர் பின்­ தொ­டர்ந்து சென்­ற­போது பதுங்கு குழி ஒன்­றில் மேலும், பலர் இருந்­த­தைக் கண்­டார்.
அவர்­கள் மீது சந்­தே­கம் ஏற்­பட்­ட­தால் உட­ன­டி­யா­கப் பொலிஸ் நிலை­யத்­துக்­கும் தக­வல் வழங்­கி­னார். அங்கு விரைந்த சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் குழி­யி­லி­ருந்த 5 பேரும் தப்­பி­யோ­டத்
 தொடங்­கி­னர். பொலி­ஸார் துரத்­திச் சென்­ற­னர்.கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்கி அவர்­கள் தப்­பி­யோ­டி­னர். பொலி­ஸா­ரும் கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்­கித் துரத்­தி­னர். இரு­வர் பிடி­பட ஏனைய மூவ­ரும் தப்­பி­யோ­டி­விட்­ட­னர் 
என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் நாவற்­குளி மற்­றும் அள­வெட்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள். இது­வ­ரை­யான விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து நாவற்­குழி கேர­தீவு வீதி­யி­லுள்ள வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பண­மும் நாவற்­கு­ழி­யில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளதாக சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தின் பொலிஸ் அதி­காரி விக்­கி­ர­ம­சிங்க
 தெரி­வித்­தார்.
நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்ட அவர்­கள் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது என்று பொலி­ஸார் மேலும் 
தெரி­வித்­த­னர்.
தென்­ம­ராட்சி தெற்­குப் பகு­தி­யில் நாவற்­குழி தொடக்­கம் தனன்­க­ளப்பு வரை­யான பகு­தி­க­ளில் மூன்ற மாதங்­க­ளாக அடுத்­த­டுத்து பல வீடு­க­ளில் திருட்டு இடம்­பெற்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை தச்­சன்­தோப்பு 
பகு­தி­யி­லும் மறு­நாள் கைத­டி­யி­லும் நகை­கள் மற்­றும் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டன.வீட்­டின் கத­வு­களை கோட­ரி­யால்
 தாக்­கிச் சேதப்­ப­டுத்தி உள்­நு­ழைந்து அங்­கி­ருந்த குடும்­பங்­களை மோச­மா­கத் தாக்கி கொள்ளை இடம்­பெற்­றி­ருந்­தது. சம்­ப­வங்­கள் தொடர்­பா­கச் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டன. திரு­டர்இ கொள்­ளை­யர்­க­ளைப் பிடிப்­ப­தில் பொலி­ஸார் அதிக ஈடு­பாடு காட்­ட­வேண்­டும் என பிர­தேச மக்­கள் கோரி­க்கை 
விடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக