siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 நவம்பர், 2018

இரு இளைஞர்கள்! கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலி

 !
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலை 7 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இ
தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்  
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார். மற்றொருவர்  வைத்தியசாலைகுக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.  
இந்த விபத்தில்  இறந்த ஒருவர் அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த  செல்வராஜா கஜீபன் வயது 18 என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.
 தீபாவளி தினமான இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக