siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 நவம்பர், 2018

ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்
இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சடலம் யாருடையது என இணங்கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும்
 நீதவான் கட்டளையிட்டார்.
இதேவேளை, இச்சடலம் செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா திருஞானம் (60 வயது) என்பவருடையது என அவரது குடும்பத்தினரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இச்சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக
 வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக