siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 நவம்பர், 2018

பாடசாலை மாணவன் முல்லைத்தீவில் தற்கொலை

முல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்தகாட்டுப்பகுதியில்,
 13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன், பாடசாலை சீரூடையுடன் தூக்கில்தொங்கிய நிலையில் நேற்று இரவு உடலமாக காணப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாரை தொடர்பு கொண்டுகேட்டபோது, மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தகவல்கிடைத்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரியுடன் செல்லவுள்ளதாகவும் 
தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் விசாரணைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக