siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 8 நவம்பர், 2020

பத்து மாதங்களில் ஓட்டமாவடியில் 348 பேருக்கு டெங்கு

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் ஏழாம் திகதி வரை 348 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணித்துள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் எம்.எச்.எம்
.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று 
வருகின்றது.
அந்தவகையில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல், டெங்கு புகை விசிறல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் தொடர்பில் டெங்கு ஒழிப்பு குழுவினருடனான கலந்துரையாடல் இன்று (08) வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக