siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 நவம்பர், 2020

சாரையடியில் சிறுமி சடலமாக மீட்பு; விளையாட்டு விபரீதமானது

 –  முதலாம்  இணைப்பு.>>>>>>>

பருத்தித்துறை – சாரையடி பகுதியில் வீட்டில் தனித்திருந்த 09 வயது சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்தார் என்றும் வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது,
 அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு
 சென்றுள்ளனர்.
இருந்தபோதிலும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 >>>>>
 இரண்டம்- இணைப்பு
 >>>>
 பருத்தித்துறை சாரையடியில் மரணித்த சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி
 உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.
கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு
 மரணமடைந்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக