siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 நவம்பர், 2020

நாட்டில் தொலைதூரக் கல்விமுறையை தொடர்ந்தும் விரிவுபடுத்த திட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பின்னர் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றிற்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் தொலைதூர கல்வி முறையை தொடர்ந்தும்
 விரிவுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பல பிரதேசங்களில் இந்த கல்வி முறையின் கீழ் சாதகமான 
முடிவுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தொலைதூர கல்வி முறையை பயன்படுத்துவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும்
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக