siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 13 நவம்பர், 2020

யாழில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுமி.மரணம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி 
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 3-ஆம் திகதி குறித்த சிறு மி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த 
ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க 
முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்தபோது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தூங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு பதறி அவரை உடனடியாக
 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி 12-11-20.அன்று உயிரிழந்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக