siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 12 மார்ச், 2022

நாட்டில் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

நாட்டில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 76 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய 
விலை 283 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேற்று முன்தினம் (10) நடவடிக்கை எடுத்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக