siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 3 மார்ச், 2022

நீங்கள் தொடர்ச்சியாக இயர்போன் பயன்படுத்துபவர்களாஅப்போஇதை படிங்க

இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது. பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர். ஒன்லைன் மூலம் கடமைகளை புரிவதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்‘ பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மும்பை அரசாங்க வைத்தியசாலை காது, மூக்கு, தொண்டை
 சிறப்பு வைத்தியர் தெரிவித்துள்ளதாவது,அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினைகள்
 ஏற்படுகிறது. 
தினந்தோறும் காதுகளில் பிரச்சினையுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு
 மேல் ‘இயர்போன்‘ அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவது காதுகளுக்கு 
அதிகஅழுத்தத்தை கொடுக்கிறது.சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ் களை பயன்படுத்தும் போது அது காதில் நோய் தொற்றை ஏற்படுத்தும். மேலும் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவது கேட்கும் 
திறனை குறைக்கும்.
இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மேலும் காதுகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறியதாவது:-தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல்
 இடைவெளிவிட்டு ‘இயர்போன்‘களை பயன்படுத்த
 வேண்டும்.கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் ‘இயர்போன்‘ பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை 
நேரடியாக பாதிக்கிறது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக