siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 24 மார்ச், 2022

மயிலவெவவில்மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 23-03-2022.அன்றிரவு  
 இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சஞ்ஞய (30 வயது) மற்றும் ஏ.எச். எம்.தம்மிக சுசந்த (28வயது) எனவும்
 தெரியவருகின்றது.
இருவரும் மோட்டார் சைக்கிளில் மல்போருவ பகுதியிலிருந்து மயிலவெவ பகுதிக்கு வந்து கொண்டிருந்த வேளை வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், புதிதாக பாலம் ஒன்றினை அமைப்பதற்கு புளி வெட்டி இருந்த நிலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குழிக்குள் விழுந்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக