siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 12 மார்ச், 2023

ஜப்பானில்பாடசாலையில் வீசிய கடும் துர்நாற்றம்: 9 மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

ஜப்பானில் உள்ள பாடசாலை ஒன்றில் வீசிய கடுமையான துர்நாற்றத்தால் 9 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
ஜப்பான் -  ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பாடசாலை ஒன்றுள்ளது. இங்கு .09-03-2023. அன்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது பாடசாலையில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக 
உணர்ந்தனர்.
துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பாடசாலை ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
அதைத்தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக