siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 ஜூன், 2018

இணைந்தசேவைக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்ப நிலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்தசேவை மேற்கொள்வதில் தனியார் மற்றும் இ.போ.சபைக்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளுக்கு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் 
தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனியார் , இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிசெல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து 
பயணிகளை ஏற்றி வருகின்றனர்.
இதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது
தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
தற்போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இது வரை இ.போ.ச , தனியார் பேரூந்து பிரச்சனை சுமுகநிலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக