siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 டிசம்பர், 2013

ஆயிரம் மக்கள் பலியெடுக்கப்பட்ட மெரீனா!!!

கடற்கரையில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு தமிழகத்தில் கடலோர கிராமங்களில் பெருவாரியாக வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25–ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய களைப்பில் 26–ம் திகதி அதிகாலையில் நல்ல தூக்கத்தில் இருந்தனர். அப்போது கடலில் உருவான சுனாமி பேரலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்தது. அயர்ந்த தூக்கத்தில் இருந்த மக்களை அப்படியே வாரி சுருட்டி கடலுக்கு கொண்டு சென்றது. நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி தொடங்கி குமரி...

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்

மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு...

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:

 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன்...

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !

  யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை...

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.. போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான். தமது...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்

மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த...

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார். இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்

 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்லினில் வெப்பநிலை ஆறு...

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !

 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய...

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க

ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர். உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம். எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய...

திங்கள், 7 அக்டோபர், 2013

அட்டகாசம் 6 வயது இரட்டை குழந்தைகளின்

இங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது. இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது. அதில்...

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாங்கள் என்ன பாவம் செய்தோம்! 11 வயது சிறுவனின் கதறல்

சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. ஆனால் இதற்கு...

சனி, 5 அக்டோபர், 2013

பேர்மிங்ஹாமில் இலங்கைப் பெண் மரணம்:

  இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்  பேர்மிங்ஹாமில் ...

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரான்ஸ் நாடு நியூயார்க் அல்ல! தொழிற்சங்க தலைவர்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த...

புதன், 2 அக்டோபர், 2013

இளம் பெண் மரணம் கணவர் படுகாயம்

      யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாய மடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியது

கனடாவில் மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.கனடாவின் புள்ளிவிபரவியல் மக்கள்தொகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கனடாவில் மொத்த மக்கள்தொகை 35,158,300 என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 404, 000 அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1.2 சதவிகித அதிகரிப்பு, கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தேசிய அளவில் அல்பேர்ட்டாவில்...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ரூ. 2.50 கோடிக்கு விற்பனையான இந்தியரின் ஓவியம்

அமெரிக்காவில் இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது. ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது. இந்த ஏலத்தில்...

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை

சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான். இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுவனின் தாயாருக்கும்,...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வேலை நிச்சயம்! கொமடி செய்தால்

  நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த...

சனி, 14 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,  கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது. முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.                                                                                                                                   ...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வாகன விபத்து !கிளிநொச்சியில் 4 பேர் படுகாயம்

  கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்,{புகைப்படங்கள்} &nbs...

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை

 வன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.30 அளவில் அரகங்வில பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவர் அதிகமான போதையில் இருந்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாதையின் அருகிலுள்ள ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கோக்கோ கோலா' 127 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இதுவரை இலங்கையர்கள் 720 0பேர் நாடுகடத்தல்

  சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை சவுதி அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே இக் காலப்பகுதியினை பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்து 200 சட்டவிரோத பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இரு வாரங்களில்மரணமான பெண் உயிருடன் வந்த

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம்...

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில்முஸ்லிம் பெண்ணைப்போல் வேடமணிந்து கொள்ளையிட்ட இராணுவம் -

இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க , இராணுவத்தின்...

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது. அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது. மேலும்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

வெடித்துச் சிதறியது ஜப்பானிய எரிமலை! -

5000 மீற்றர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது. ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீற்றர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீற்றர் தூரத்திற்கு மேலே சாம்பலை கக்கியது.எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை ‌போட்டுதான் செல்ல முடிந்த...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணம்: ரஷ்யா

மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக்கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்தியா வந்ததாகும். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்....

சனி, 17 ஆகஸ்ட், 2013

மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய??

    ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது ஆசன வாயிலில், 80 லட்ச ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இரத்தினக் கற்களை கடத்தியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். பேருவளையைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடும் நிலநடுக்கம்! - ரயில், விமானப் ரத்து.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆரம்பக்கட்டத்தில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வீதியில் நின்றுவிட்டனர்.நியூசிலாந்தின் தெற்குத் தீவின் வடக்கு முனைப் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் 6.0 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு...

இள வயது திருமணங்கள் அதிகரிப்பு -

இலங்கையில் இள வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இள வயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) தரம் தழுவிய விசாரணையொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமித்திருந்தது. இலங்கையில் குறிப்பாக...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

விமானத்தை விட வேகமான வாகனம்: அமெரிக்காவில் புதிய ,,

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின்...

புதன், 14 ஆகஸ்ட், 2013

விடுமுறையில் உச்சப் பாதுகாப்பு!!

தனது விடுமுறை வாசஸ்தலமான villa du Cap Nègre (Var) இற்கு விடுமுறைக்குச் சென்றுள்ள முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்சோலா சார்க்கோசிக்கு அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் பிரபலங்களின் பாதுகாப்புச் சேவையான (Service de protection des hautes personnalités) SPHP யின் சிறப்புப் படையினர் பத்துப் பேரும் 15 குடியரசுப் பாதகாப்புப் படை வீரர்களும் (CRS) ஓகஸ்ட் மாதம் முதல் நிக்சோலா சார்க்கோசிக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதை உறுதி...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு

வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது. பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர்...

நிதானமின்றி வீதியில் நின்ற கனடா மேயர்

கனடாவின் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இன்னுமொரு வீடியோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும்...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

34 பேர் கைது வெளிநாட்டுக்கு செல்லவிருந்த

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக...

செவ்வாய், 30 ஜூலை, 2013

சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை இடம்பெறவுள்ளது

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையை இன்று மாலை 3 மணிக்கு முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது. நாட்டி தெரிவு செய்யப்பட்ட 14 கரையோர பிரதேசங்களில் இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மத்திய நிலையத்தின் ஊடகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் லால் குமார தெரிவித்தார். சுனாமி பேரலை உருவாகுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள்...

வர்த்தகர் மீது அசிட் வீச்சு கிளிநொச்சியில் தாக்குதல்

கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி திவாகரன் என்ற வர்த்தகரே அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து  குறித்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடலில்...

றோயல் கல்லூரி ஆசிரியை பாடசாலை கூரை மீது ஏறி

  கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த இடமாற்றமானது தன்னை பழிவாங்கும் செயல் என குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாக...

பிள்ளை யார் பக்திப்பாடல்கள்

வேண்டுவோர்க்கு வேண்டும்வரம் அருளும் வினை தீர்க்கும்அருள் மிகுபிள்ளை யாரின்  மிகவும் பக்த்திப் பரவசம் ஊட்டும் சிறந்த பாடல்கள் ...