siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

ஈழ அகதி கனடாவில் கோரமாகப் படுகொலை

கனடாவின் கொலை செய்யப்பட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடல், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும், நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை,
 இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு கதறியழுதனர்.இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது; இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், படகு மூலம் கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால், நண்பர்களுடன் மறைந்து வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் இவர் காணாமல் போனபோதும், உறவினர்கள் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை
.தமது மகன் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படலாம் என்று அஞ்சி தாம் முறையிடவில்லையென அவரது தாயார் 
தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், கனடாவை அச்சுறுத்தும் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மக் ஆர்தரினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு
, தற்போது இறுதிக்கிரியை நடத்தப்பட்டுள்ளது.புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், தமது உறவினர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துவதோடு, மறைந்து வாழ்வது ஆபத்தானது என மனிதநேய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக