தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக