siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

புத்தளத்தில் காணாமல் போன தமிழ்ப் பெண் நீரோடையில் சடலமாக மீட்பு

 

 
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர்.24-08.20. அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி எனும்
 .71,வயது வயோதிப
 பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை .22-08-20.முதல் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்த நிலையில், மூன்று
 நாட்களின் பின்னர் காணாமல் போன குறித்த வயோதிப பெண் புழுதிவயல் களப்புக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை .24-08-20. சடமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண்ணின் சடலம் மரண
விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை
என்பவற்றுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக