siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 ஆகஸ்ட், 2020

இத்தாலில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்ட பெண் மரணம்


இத்தாலில் இளம் குடும்பபெண் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்ட பின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் Sicily-யில் இருக்கும் Palermo-வில் வெயிட்டராக பணிபுரிந்து வந்தவர் Refka Dridi. 27 வயது
 மதிக்கத்தக்க இவர், கடந்த வாரம்.(30) வியாழக்கிழமை வேலையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், தன்னுடைய
 வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்டுள்ளார்.ஆனால், உள்ளே இறால் இருந்ததை அறியாமல் சாப்பிட்டதால், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதை 
அறிந்த அவர் உடனடியாக உதவி பெறுவதற்காக
 அருகில் இருந்தவர்களிடம் தேடி ஓடினார். அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவ குழு வருவதற்குள் Refka Dridi சரிந்து விழுந்துள்ளார்.இதையடுத்து அவர் உடனடியாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு
 சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இவருக்கு திருமணமாகி 8 மாத குழந்தை இருப்பதாகவும், சம்பவ தினத்தன்று அவரின் கணவர் வீட்டில் இல்லை என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக