siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 மே, 2023

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. 
நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் 
நடைபெற்று வருகிறது.
 30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 பேர் விவரம் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் 
விவரம்:- அஸ்னா (வயது 18), சப்னா (வயது 7), பாதிமா மின்ஹா (வயது 12), சித்திக் (வயது 35), ஜலசியா ஜபீர் (வயது 40), அப்லக் (வயது 7), பைசல் (வயது 3), அன்ஷித், ரஷீனா.ஆகியோர் என்பது
 குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக