siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 13 ஜூலை, 2022

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப் படுகிறீர்களா உடன்போக்க இதோ

எம்மில் சிலருக்கு உடலில் ஏற்படும் அதிக வியர்வை, காஷ், வாய்த் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளால் பல நேரங்களில் பல இடங்களில் மற்றவர்களுடன் இருக்கும் போது சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம். அந்த வகையில் வாயில் இருந்து வரும் துரு நாற்றத்தை எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாய்த் துர்நாற்றம் வர பல காரணங்கள் உண்டு. சரியாக பல் விலக்காமல் இருப்பது, செரிமான கோளாறு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவது, வாயில் ஏற்படும் கிருமி தொற்று, புகையிலை, அசைவ உணவு போன்றவற்றினால் கூட வாயில் 
துர்நாற்றம் ஏற்படலாம்.
இதனை எப்படி சரிசெய்வது? வாங்க பாக்கலாம். புதினா இலைகளை மென்று தின்பதால் வாயில் இருக்கும் கெட்ட பக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு வாய் துர்நாற்றம் குறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சினை எளிதில் சரியாகும்.
காலை எழுந்ததும் டீ, கோப்பி போன்றவற்றிற்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது நன்மை தரும்.
மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை பல்துலக்குவது, பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது, பல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது, இயற்கையாக விளைந்த காய்கறிகளை உண்பது போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சினையை 
சரி செய்யமுடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக