siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 20 ஜூலை, 2022

யாழில் போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 20-07-2022.இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம்
 இடம்பெற்றுள்ளது .
நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.யாழ். போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சல மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது .
இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று
 தெரிவிக்கப்பட்டது .
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக