siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 மார்ச், 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள மருத்துவர்

பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் 
முன்வந்துள்ளார்.
பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெaற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்து லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை 
அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.இதையடுத்து குறித்த 
குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள விரும்புகிறேன் 
என்று கூறி 
அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் 
கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறைப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக