siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மார்ச், 2021

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு புதிய தடை!!!

நாட்டில்  ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு 31 -03-2011.இன்று  முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு தடவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு (Polyethylene Terepthalate) தடை விதிக்கப்படவுள்ளது.அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு
 குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு 
மற்றும் மருந்து 
அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு 
பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி பொருட்களை நாளை முதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று (29) நடத்திய ஊடகச் சந்திப்பில் 
தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக