கொழும்பு கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மோட்டார் வாகனத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் வாகனம் மற்றும் சடலம் எரிந்த நிலையிலேயே காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.33 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.10-03-2021,அன்று
இரவு 11.30 மணியளவில் இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்தவர் களுபோவில பாத்திய மாவத்தை
சேர்ந்தவர் எனவும்
அடையாளம் காணப்பட்டுள்ளது.அவர் இரவு உணவு பெறுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வாளர்கள் வருகைத்தந்து சம்பவம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக