siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 14 மார்ச், 2021

சிறுநாவற்குளத்தில் விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு

 மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் 14-03-2021,¨இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த 
மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்தன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துளள்தோடு,மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிய  வருகின்றதுசெட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் -38 வயது இளைஞர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு
 வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக