siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 14 அக்டோபர், 2020

கற்பகபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தாயார்:

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது.14.10-20. இன்று காலை 7.00 மணிக்கும் 8.45 மணிக்கும் இடையியலான நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
சடலமான மீட்கப்பட்டவர் முத்துக்குமார் கஜனி (வயது 27) என உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்றைய தினம் வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் 
வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் போது குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து, இது தொடர்பில் அயவர்களின் கற்பகபுரம் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமசேவையாளர் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு 
தகவலை வழங்கினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு 
பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளதாகவும் அயலவர் தெரிவித்திருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக