siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 அக்டோபர், 2020

புங்குடுதீவில் வீட்டிற்குள் புகுந்து கோயில் பூசகர் வெட்டிக் கொலை

 புங்குடுதீவு கோயில் அர்ச்சகர் இனம் தெரியாவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்..02-10-20.நேற்று நள்ளிரவு 
வீடு புகுந்த மர்ம நபர்கள், உதவியாளரை கட்டி வைத்து விட்டு, அர்ச்சகரை வெட்டிக் கொன்றுள்ளனர்.புங்குடுதீவு 
ஊரதீவுச்சிவன் கோயில் அர்ச்சகரான 
கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா (33) என்பவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.புங்குடுதீவில் மாடு வெட்டப்படுவதற்கு எதிராக பூசகர் தொடர்ந்து
 செயற்பட்டு வந்தார். அவர்கள் தொடர்பான தகவலை வழங்கி வந்தார்.இந்தக் கொலையுடன் மாடு வெட்டுபவர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் 
விசாரணை நடந்து வருகிறது.
(இணைப்பு:01)
<<<<<<<>>>>>
 -யாழ்.புங்குடுதீவு – ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு 
வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக
 பொலிஸார் கூறியுள்ளனர்.ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது 
சடலம்.03-09-20. இன்று சனிக்கிழமை
 அதிகாலை கண்டறியப்பட்டது என்று 
பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கொலைச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும்
 ஊர்காவற்றுறை பொலிஸார் பூசகரின் உதவியாளரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இதேவேளை குறித்த பூசகரி புங்குடுதீவு உள்ளிட்ட தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு தொிவித்துவந்ததுடன், பொலிஸாருக்கு தவல்களையும் 
வழங்கிவந்துள்ளார்.(இணைப்பு:02)

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக