siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 அக்டோபர், 2020

நபரொருவர் கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து பலி

 திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் 03-10-20.அன்று காலை இடம்பெற்றுள்ளதாக 
தெரியவருகிறது.
உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக