siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ஐந்து நாட்களின் பின்னும் இறந்த உடலில் கொரோனா வைரஸ்

காலியில் அண்மையில் கொரோனா தொற்றால் மரணித்த ஒருவரின் சடலம் மீது ஐந்து நாட்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் உடலில் கொரோனா வைரஸ் இருந்தமை இன்று (26) உறுதி 
செய்யப்பட்டுள்ளது.
19ம் திகதி இறந்தவரின் குறித்த சடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவில் 24ம் திகதி தகனம் செய்வதற்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனையின் போதே உடலில் தாெடர்ந்தும் வைரஸ் இருப்பது 
உறுதியானது.
இதன்படி கொரோனா வைரஸ் இறந்த உடலில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது உறுதியாகியுள்ள நிலையில், முஸ்லிம்களின் உடல்களை குளிர்ந்த கொள்கலன்களின் வைக்கும் திட்டம் தொடர்பில் சந்தேகம் 
எழுந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக