இரத்தினபுரி மற்றும் கெகிராவை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை வீதியின் குறுக்காக தள்ளி சென்ற போது லொறி ஒன்று மோதிய விபத்தில் 70 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று (13) அதிகாலை கெகிராவை, தம்புள்ளை
வீதியின் சூரியகம சந்திக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக