siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 டிசம்பர், 2020

நாட்டில் 34 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நேற்று மட்டும் 616 பேருக்கு தொற்று

நாட்டில் நேற்று 616 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,734 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 560 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 51 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து வந்த இரண்டு 
நபர்கள், உக்ரைனிலிருந்து இரண்டு பேர் மற்றும் குவைத்திலிருந்து ஒருவர் உட்பட ஐந்து வெளிநாட்டிலிருந்து 
வந்தவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட- பேலியகொட கொரோனா 
கொத்தணி 31,070 ஆக அதிகரித்தது.7 வெளிநாட்டினர் உட்பட 8,925 பேர் தற்போது நாடு முழுவதும் 63 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று குணமடைந்த 785 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 25,652 ஆக உயர்ந்தது.499 பேர் கொரோனா சந்தேகத்தில் 
கண்காணிப்பில் உள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக