நுவரெலியா – டிக்கோயா, டங்கன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் காணப்பட்ட மணியின் கயிற்றில் விளையாடிய சிறுவன் ஒருவன், குறித்த கயிறு கழுத்தில் உயிரிழந்துள்ளான்.
இன்று (11) காலை இடம்பெற்ற இந்த சோகச் சம்பவத்தில் நோவூட் தமிழ் பாடசாலை ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவனே
உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவனின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இச்சிறுவன் ஆலயத்தின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இத்தருணத்திலேயே மேற்படி சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக