வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் பெண் ஒருவர் ..08-12-20. இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்த
சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும்
தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக