siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்ரு எண்ணிக்கை அதிகரிப்பு

 

இலங்கையில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த
 எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.அதில் ஒருவர், கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்த கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 11 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 5 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த நால்வருக்கும் கட்டார், வியட்நாட் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை 
தந்த தலா ஒவ்வொருவருக்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேநேரம், பங்களாதேஷில்
 இருந்து வந்த 4 பேருக்கும் இவ்வாறு 
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.இதனையடுத்து மேலும் 244 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்
 சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை நேற்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா
 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக