siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இடம்பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் பிரதான வீதியில் இளைஞர் ஒருவர்

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்
 உயிரிழந்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற குறித்த விபத்தில், நிந்தவூர் 4ம் பிரிவைச் சேர்ந்த நஜாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைபற்று பகுதியில் இருந்து வந்து கொண்டிருத்த போது, அதே பக்கமாக வந்த கன்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால் திரும்ப முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார் சைக்கிள், லொறியில் மோதுண்டு, மறுமுனையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி
 தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக
 எடுத்துச்செல்லப்பட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக