siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 26 செப்டம்பர், 2020

கொல்லர் புளியங்குளம் பகுதியில்பயணிகள் பேரூந்து மோதி .ஒருவர் பலி

 

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் பேருந்து மோதியதில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த
 சம்பவம் 25-09-20.அன்று  இரவு கனகராயன்குளம் – கொல்லர் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. பிரதான
 வீதியால் நடந்து சென்றவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணகுமார (வயது 41) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக